நிலக்கரி கையிருப்பு அதிகரித்து வருகிறது - மத்திய மந்திரி தகவல்


நிலக்கரி கையிருப்பு அதிகரித்து வருகிறது - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2021 12:09 AM GMT (Updated: 14 Oct 2021 12:09 AM GMT)

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பிலாஸ்பூர், 

சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 3 நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று பிலாஸ்பூருக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிலக்கரி பிரச்சினையில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. மின்சார உற்பத்திக்கு இன்றைய தேவை 11 லட்சம் டன் நிலக்கரி. ஆனால், நாங்கள் 20 லட்சம் டன் நிலக்கரி வினியோகித்து இருக்கிறோம். இதனால், நிலக்கரி கையிருப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. 

அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 19 லட்சம் டன் நிலக்கரியும், 20-ந் தேதிக்கு பிறகு, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் டன் நிலக்கரியும் வினியோகிக்குமாறு மத்திய மின்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், எங்கள் நிலக்கரி அமைச்சகம் இன்று (நேற்று) ஒரே நாளில் 20 லட்சம் டன் நிலக்கரி வினியோகித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story