உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை


உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை
x
தினத்தந்தி 17 Oct 2021 12:10 PM GMT (Updated: 17 Oct 2021 12:10 PM GMT)

உத்தரபிரதேசத்தில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பாதிப்பில் இருந்து 19 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில்க் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 16,87,011 ஆக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு உத்தரபிரதேசத்தில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,898 ஆக அதிகரித்துள்ளது.  


Next Story