அப்பாவிகள் கொலையில் காஷ்மீரிகளுக்கு தொடர்பில்லை: பரூக் அப்துல்லா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Oct 2021 9:50 PM GMT (Updated: 17 Oct 2021 9:50 PM GMT)

அப்பாவிகள் கொலையில் காஷ்மீரிகளுக்கு தொடர்பில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காஷ்மீரில் சமீபகாலமாக நடந்து வரும் அப்பாவி மக்கள் கொலைகள் துரதிருஷ்டவசமானவை. ஒரு சதித்திட்டத்தின்கீழ் இவை நடந்து வருகின்றன. இவற்றில் காஷ்மீரிகள் சம்பந்தப்படவில்லை. ஆனால் அவர்களை இழிவுபடுத்த இவை செய்யப்படுகின்றன. அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்புறவை உருவாக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கதுதான். அதன்மூலம் நாங்கள் அமைதியாக வாழ்வதை விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

Next Story