மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Oct 2021 8:32 AM GMT (Updated: 18 Oct 2021 8:32 AM GMT)

மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக  குறைந்து வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மராட்டியத்திலும் தற்போது வைரஸ் பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தினசரி  கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. 

மும்பையில் முதல் முறையாக நேற்று தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.  கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தின் கல்யாண் நகரில் உள்ள ஆதர்வாடி சிறையில் சிறைக்கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த சிறைக்கைதிகள் தானே சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story