கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி


கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Oct 2021 12:53 AM GMT (Updated: 19 Oct 2021 12:53 AM GMT)

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் சென்றடைந்து உள்ளது. இதை மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிகவும் முக்கியமானது என அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

Next Story