கேரளாவில் இன்று 7,643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 643 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 10 ஆயிரத்து 488 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47 லட்சத்து 60 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 80 ஆயிரத்து 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story