மாணவிக்கு பாலியல் தொல்லை: கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


மாணவிக்கு பாலியல் தொல்லை: கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x

பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

புதுச்சேரி, 

புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி நடைபெற்று வருகிறது. தாமரைக்கண்ணன் என்பவர் பயிற்சியாளராக உள்ளார். இந்தநிலையில் அங்கு பயிற்சி பெற்று வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர். குழந்தைகள் நலக்குழு விசாரித்து விட்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.

இதையடுத்து பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீதும், தவறுக்கு உடந்தையாக இருந்ததாக மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் கிளப் முன்னாள் செயலாளர் தாமோதரன், இணை செயலாளர் வெங்கட், முன்னாள் செயலாளரின் மகனும், கிரிக்கெட் கிளப் கேப்டனுமான ரோகித் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில் ரோகித் பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவரின் மருமகன் ஆவார்.

Next Story