மேற்கு வங்கத்தில் இன்று 846 பேருக்கு கொரோனா
மேற்கு வங்கத்தில் தற்போது 7,577 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,84,492 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19,033 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மேற்கு வங்கத்தில் இன்று 792 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,57,882 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 7,577 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்குவங்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story