திரிபுரா முதல்-மந்திரி ஒரு பயனற்ற நபர்; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.


திரிபுரா முதல்-மந்திரி ஒரு பயனற்ற நபர்; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.
x
தினத்தந்தி 22 Oct 2021 8:14 PM GMT (Updated: 22 Oct 2021 8:14 PM GMT)

திரிபுரா முதல்-மந்திரி ஒரு பயனற்ற மனிதர் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.



அகர்தலா,

திரிபுராவில் வருகிற 2023ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், திரிபுராவுக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி சுஷ்மிதா கூறும்போது, எங்களுடைய கார்களை சில குண்டர்கள் தாக்கினர்.  எங்களுடைய தொண்டர்களை அடித்தனர்.  பா.ஜ.க. ஒரு பாரதீய குண்டா கட்சி என்பது தெளிவாகி விட்டது.

முதல்-மந்திரி பிப்லப் தேவ் அவர்களை பாதுகாக்கிறார்.  தாக்குதல் நடத்தியவர்கள் தங்களுடைய முகங்களை மறைத்து கொள்ள வேண்டும் என்று கூட கவலை கொள்ளவில்லை.  முதல்-மந்திரி ஒரு பயனற்ற நபர் என்று கூறியுள்ளார்.


Next Story