செல்போன் தராததால் 23 வயது நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சிறுவன்


செல்போன் தராததால் 23 வயது நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சிறுவன்
x
தினத்தந்தி 23 Oct 2021 7:09 PM GMT (Updated: 23 Oct 2021 7:09 PM GMT)

செல்போன் தராததால் 23 வயது நிரம்பிய நண்பனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் மாவட்டம் பர்சியோனியை சேர்ந்த 23 வயது நிரம்பிய வாலிபர் பிரிதம் கமேட். இவருக்கு சிறுவன் ஒருவன் நண்பனாக இருந்துள்ளார். 

இந்நிலையில், பிரிதம் கமேட் தனது நண்பனான சிறுவனுடன் நேற்று பேசிக்கொண்டிருந்துள்ளான். அப்போது, அந்த சிறுவன் பிரிதம் கமேட்டிம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது, செல்போன்னில் ஜார்ஜ் இல்லை அதனால் உன்னிடம் கொடுக்கமாட்டேன் என்று பிரிதம் தனது நண்பனான சிறுவனிடம் கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த சிறுவன் தனது நண்பனான 23 வயது நிரம்பிய பிரிதம் கமேட்டை இரும்பு கம்பியால் அடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பிரிதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.   

Next Story