அசாமில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அசாமில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 Oct 2021 7:56 PM GMT (Updated: 23 Oct 2021 7:56 PM GMT)

அசாம் மாநிலத்தில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, அசாமில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 219 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 98 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

Next Story