மன் கி பாத்: புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி


மன் கி பாத்: புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Oct 2021 6:10 AM GMT (Updated: 24 Oct 2021 7:44 AM GMT)

100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

82-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தில்  இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. 100 கோடி தடுப்பூசிக்கு பின் எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் அடங்கியுள்ளன.  பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் ஈடுபட வேண்டும். அடுத்த மாதம், பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை இந்தியா கொண்டாட உள்ளது. 

அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுத்தது ஒருவரின் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி எப்படி பெருமை கொள்வது, சமூகத்தை  கவனித்து அநீதியை எதிர்த்துப் போராடுங்கள்.  இளைஞர்கள் அவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Next Story