பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு


பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 11:19 PM GMT (Updated: 24 Oct 2021 11:19 PM GMT)

பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.


சண்டிகார்,

வடமாநிலங்களில் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.  இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாப்பில் மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன.  இதுபற்றி துணை முதல்-மந்திரி ஓ.பி. சோனி கூறும்போது, மழையால் பயிர்களை சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு விரைவில் இழப்பீட்டு தொகையை விடுவிக்கும் என துணை முதல்-மந்திரி என தெரிவித்து உள்ளார்.


Next Story