ரூ.3 கோடி வருமான வரி செலுத்த கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்


ரூ.3 கோடி வருமான வரி செலுத்த  கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:32 AM GMT (Updated: 25 Oct 2021 11:32 AM GMT)

அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறி உள்ளனர்.



அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு  கூறி உள்ளனர்.

மதுரா

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர்  பிரதாப் சிங், பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் வசித்து வருகிறார். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் போலீஸ் நிலையத்தில்  புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில்  தான் ஒரு மோசடியாளர் என்று கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால், பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார்  தெரிவித்துள்ளனர்.

வங்கியிலிருந்து பான் அட்டை கேட்டதால், கடந்த மார்ச் மாதம்  பான் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். பிறகு, உண்மையான பான் அட்டைக்குப் பதிலாக வண்ண நிற நகல் கிடைத்துள்ளது. அவருக்கு படிப்பறிவு இல்லாததால், இது நகல் என்பது தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு  கூறி உள்ளனர்.

தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இவரது பான் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்ற வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர்கள் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வணிகம் செய்திருப்பதகாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸ் நிலையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story