பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா


பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 25 Oct 2021 4:20 PM GMT (Updated: 25 Oct 2021 4:20 PM GMT)

பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ளார்.

ஸ்ரீநகர், 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமித்ஷா இன்று புல்வமாவில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-  

ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் இருந்த காலம் இருந்தது. தற்போது அதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றார். 

Next Story