ராகுல் காந்தி வரும் 30 ஆம் தேதி கோவா பயணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 30- ஆம் தேதி கோவா பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்ட உள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 30- ஆம் தேதி கோவா பயணம் மேற்கொள்கிறார். கோவாவில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி, மீனவர்களையும் சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
Related Tags :
Next Story