மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன், கற்பழிப்பு வழக்கில் கைது
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் முரளி மார்வால். இவரது மகன் கரன் மார்வால் (வயது 30). 6 மாதங்களுக்கு முன்பு, கரன் மார்வால் தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கரன் மார்வால் தலைமறைவானார்.
இந்த நிலையில் போலீசார் கரன்மார்வாலை கைது செய்தனர். ஷாஜபூர் மாவட்டம் மாக்சி நகரம் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Related Tags :
Next Story