கேரளாவில் இன்று 9,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கேரளாவில் இன்று 9,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 27 Oct 2021 4:22 PM GMT (Updated: 27 Oct 2021 4:22 PM GMT)

கேரளாவில் இன்று 9 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 9 ஆயிரத்து 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 76 ஆயிரத்து 554  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 93 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்து சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாத 199 உயிரிழப்புகளும் பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

Next Story