ஜம்மு காஷ்மீரில் பாதுக்காப்பு படையினருடன் நடந்த மோதல்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குல்காம் மாவட்டத்தில் கடந்த அக்.20ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story