மராட்டிய உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டிய உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 28 Oct 2021 4:34 AM GMT (Updated: 28 Oct 2021 4:34 AM GMT)

மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அதிக அளவில் உயிரிழப்புகளும் காணப்படுகின்றன.  இந்நிலையில், கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்து ஊரடங்கில் பரவலாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  உடல்நிலை சீராக உள்ளது.  மருத்துவரின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன்.  நாக்பூர் மற்றும் அமராவதிக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story