மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் டிஸ்சார்ஜ்
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்கார் மலேரியா பாதிப்புக்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தங்காருக்கு கடந்த 25ந்தேதி மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மலேரியா பாதிப்புக்கான சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல்நலம் தேறிய நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செல்கிறேன். மருத்துவர்கள் மற்றும் செவிலி பணியாளர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி உள்ளனர். போற்றத்தக்கது என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story