காஷ்மீரில் சாலை விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


காஷ்மீரில் சாலை விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Oct 2021 6:04 PM GMT (Updated: 28 Oct 2021 6:04 PM GMT)

காஷ்மீரில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீ நகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.  

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் மினி பேருந்து ஒன்று தாத்திரியில் இருந்து தோடா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. படோட்-கிஷ்த்வார் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஜி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட 25 பேரில் முதற்கட்டமாக 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story