இந்தியாவில் நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60.83 கோடி
இந்தியாவில் இதுவரை நடந்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60,83,19,915 ஆக உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் பல கட்டங்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,35,142 கொரோனா மாதிரி பரிசோதனைகள் நடந்துள்ளன.
இதனால், நாட்டில் இதுவரை நடந்த மொத்த கொரோனா மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 60,83,19,915 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 1,06,14,40,335 ஆக உள்ளது.
Related Tags :
Next Story