மாநிலங்கள் உருவான தினம்; ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து
1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.
புதுடெல்லி,
மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளா , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில மக்களுக்கு காங்கிரஸ் எம்.பிராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஜனநாய மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது இதை நாம் காக்க வேண்டும். மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினமான இன்று நமது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார்.
1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. அதுபோன்று, 1966- ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பஞ்சாப், அரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும், 2000- ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சத்தீஷ்கர் மாநிலமும் மாநில தினத்தை கொண்டாடுகின்றன.
Related Tags :
Next Story