மாநிலங்கள் உருவான தினம்; ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து


மாநிலங்கள் உருவான  தினம்; ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Nov 2021 10:28 AM GMT (Updated: 1 Nov 2021 10:28 AM GMT)

1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.

புதுடெல்லி,

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளா , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட  மாநில மக்களுக்கு காங்கிரஸ் எம்.பிராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஜனநாய மதிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எந்த விலை கொடுத்தாவது இதை நாம் காக்க வேண்டும். மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினமான இன்று  நமது சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார். 

1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.  அதுபோன்று, 1966- ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி  பஞ்சாப், அரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும், 2000- ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சத்தீஷ்கர் மாநிலமும் மாநில தினத்தை கொண்டாடுகின்றன. 

Next Story