புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் - சித்தராமையா கோரிக்கை


புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் - சித்தராமையா கோரிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2021 6:15 PM GMT (Updated: 2 Nov 2021 6:15 PM GMT)

புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்க வேண்டும் என்று கன்னட திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ராஜ்யோத்சவா விருது அவருக்கு கிடைக்கவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக கூறினார். 

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் புனித் ராஜ்குமார் ஈட்டிய மக்களின் அன்பு, விருதுகளை விட பெரியது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரது நடிப்பு திறன் மற்றும் ஆற்றிய சமூக சேவைகளுக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கும். அதனால் தற்போது அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Next Story