1.5 கோடி மதிப்புடைய 1,589 திருட்டு செல்போன்கள் பறிமுதல் - 5 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் திருட்டு கும்பலிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய 1,589 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய திருடர்கள் சிலர் ஆக்ரா நோக்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராய்ப்புரா ஜட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இரு வாகனங்களில் வந்த 5 பேரை இடைமறித்து விசாரணை நடத்தினர்.
அதில், 5 பேரும் கூட்டாக இணைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 5 திருடர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிம் இருந்து 1,589 புதிய செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு 1.5 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story