மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் 3.8 அளவாக பதிவு
மணிப்பூரில் இன்று ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் உக்ரல் மாவட்டத்தில் உள்ள ஷிருய் என்ற பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஷிருய் பகுதியில் இருந்து 62 கி.மீ. வடகிழக்கில், தரைப்பகுதியில் இருந்து சுமார் 60 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story