காற்று மாசு: டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை


காற்று மாசு: டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை
x
தினத்தந்தி 10 Nov 2021 3:52 AM GMT (Updated: 10 Nov 2021 3:52 AM GMT)

காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில், காற்று மாசு அதிகரிப்பது ஆண்டுதோறும் பெரும் பிரச்சினையாக நிலவுகிறது. பக்கத்து மாநிலங்களில் காய்ந்த விவசாய பயிர்களை தீயிட்டு எரிப்பதும், வாகனங்கள் வெளியிடும் புகையும் இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 

இந்தநிலையில், டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து அம்மாநில சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

பொதுமக்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து, பொது போக்குவரத்தை நாடுவார்கள் என்பதால், இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும், பொதுவெளியில் பயிர் கழிவுகள் எரிப்பதை கண்காணிக்க 550 குழுக்கள் ரோந்து சுற்றி வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story