போதைபொருள் பரவலை தடுக்க முதல்-மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் - அமித்ஷா


போதைபொருள் பரவலை தடுக்க முதல்-மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் - அமித்ஷா
x
தினத்தந்தி 14 Nov 2021 5:09 PM GMT (Updated: 14 Nov 2021 5:09 PM GMT)

தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

திருப்பதி,

திருப்பதியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, 

தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், மொழிகள் இந்தியாவின் பழமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. தென்னிந்திய மாநிலங்கள் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்தும் அளிக்கிறது. இன்றைய தென்னிந்திய மாநில முதல்-மந்திரிகளின் கூட்ட விவரங்கள் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 111 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.  

போதைப்பொருள் பயன்பாடு நமது இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் அழிக்கும் என்பதால், போதைப்பொருள்களின் அச்சுறுத்தல் மற்றும் பரவலை தடுக்க  முதல்-மந்திரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

Next Story