கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளத்தில் கனமழை காரணமாக மாநிலத்தின் பல ஆறுகள் அபாயகரமான நிலையை எட்டியுள்ளன. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது. இதேபோன்று கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story