எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
பீகாரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜமுய் நகர் நோக்கி இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 10 பேர் பயணம் செய்தனர்.
லகிசாரி மாவட்டம் பிபரா கிராமம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுபுறத்தில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story