மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது


மராட்டியத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 18 Nov 2021 12:25 AM GMT (Updated: 18 Nov 2021 12:25 AM GMT)

மராட்டியத்தில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசி மிக முக்கிய பங்காற்றுகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்தது. மராட்டியம் இந்த மைல்கல்லை நேற்று மாலை 4 மணி அளவில் எட்டியுள்ளது. இதுவரை 3 கோடியே 46 லட்சம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story