திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Nov 2021 6:59 PM GMT (Updated: 18 Nov 2021 6:59 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 31 ஆயிரத்து 995 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் 31 ஆயிரத்து 995 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17 ஆயிரத்து 125 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 45 லட்சம் கிடைத்ததாக, பரகாமணி சேவா குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story