நூதன முறையில் 85 கிலோ தங்கம் கடத்தல்
டெல்லி, அரியானாவில் நடந்த சோதனையின் முடிவில் 85 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி (சத்தார்பூர்) மற்றும் அரியானாவில் (குருகிராம்) வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 85.535 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.42 கோடி ஆகும்.
இந்த தங்கம் கட்டிகளாகவும், உருளை வடிவிலும், இயந்திர பாகங்களாக உருமாற்றம் செய்யப்பட்டு கடத்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அதன்பின்பு உள்ளூர் சந்தைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தென்கொரியாவை சேர்ந்த 2 பேர், சீனா மற்றும் தைவானை சேர்ந்த தலா ஒருவர் என 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story