ஒடிசாவில் சாலையோரம் 5 கிலோ வெடிகுண்டு; கண்டறிந்த பி.எஸ்.எப்.
ஒடிசாவில் சாலையோரம் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் ராமகிரி பகுதியில் புஜாரிபுத் சவுக் என்ற இடத்திற்கருகே ராமகிரி குப்தேஷ்வர் சாலையில் சீரமைக்கப்பட்டு வந்த சாலையோரம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு
ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
இது 5 கிலோ எடை கொண்டிருந்துள்ளது. இந்த வெடிகுண்டு பற்றி உளவு அமைப்பு அளித்த தகவல் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் குழு ஆகியவை சென்றன. இதில், அந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால், பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story