ஜார்க்கண்டில் தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள்- ரெயில் சேவை பாதிப்பு


ஜார்க்கண்டில் தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள்- ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2021 9:59 AM GMT (Updated: 20 Nov 2021 9:59 AM GMT)

மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் போஸ் என்பவரை ஜார்கண்ட் போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

லேட்ஹர்,

மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் போஸ்  என்பவரை ஜார்கண்ட்  போலீசார் அண்மையில் கைது செய்தனர். பிரஷாந்த் போஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவோயிஸ்டுகள் அமைப்பினர் நாடு தழுவிய போராட்டத்திற்கு இன்று  அழைப்பு விடுத்தனர். 

இந்த நிலையில், ஜார்கண்ட் மநிலத்தின் ரிச்சுகுதா மற்றும் டேமு  ரயில் நிலையத்திற்குப்பட்ட இடத்தில் உள்ள தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர். இதில் ரெயில்வேக்கு சொந்தமான் டீசல் என் ஜின் ஒன்றும் சேதம் அடைந்துள்ளது. 

தண்டவாளம் சேதம் அடைந்ததால் அப்பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், தண்டவாளங்களை சீர் செய்யும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.  பல ரெயில்கள் மாற்றுப்பதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும் பயணிகள் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story