குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்


குஜராத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை முதல் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 21 Nov 2021 9:06 AM GMT (Updated: 21 Nov 2021 9:06 AM GMT)

குஜராத்தில் நாளை முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.



ஆமதாபாத்,

குஜராத்தில் கொரோனா பரவல் குறைந்த சூழலில் கடந்த செப்டம்பர் 2ந்தேதி முதல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், குஜராத் கல்வி மந்திரி ஜித்து வகானி இன்று கூறும்போது, மாநிலத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன என கூறியுள்ளார்.

இதற்கான வருகை பதிவு கட்டாயமில்லை எனவும், பெற்றோரின் ஒப்புதல் (வகுப்புகளுக்கு தங்களுடைய குழந்தைகள் செல்லலாம்) கடிதம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story