வேளாண் சட்டம் வாபஸ்: பாஜக தலைவர்களின் அறிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறது - பிரியங்கா காந்தி
தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில் தேவைப்பட்டால் மீண்டும் கொண்டு வரப்படலாம் என ராஜஸ்தான் கவர்னர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பிரியங்கா காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலுக்குப்பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாஜக தலைவர்களின் அறிக்கைகள் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக்கூறிவிட்டு பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்றார்.
Related Tags :
Next Story