திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 99 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.
தற்போது திருப்பதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், பக்தர்கள் தரிசனத்திற்காக வருவதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதியில் தற்போது பக்தர்களின் வருகை சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 99 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 222 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 76 லட்சம் கிடைத்ததாக, கோவில் பரகாமணி சேவா குலு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story