கேரளாவில் 6 வழிச்சாலை அமைக்க ரூ.3,465 கோடி: நிதின்கட்காரிக்கு பினராயி விஜயன் நன்றி..!
கேரளாவில் 6 வழிச்சாலை அமைக்க ரூ.3,465 கோடி ஒதுக்கிய மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு, பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கொடுங்கல்லூரில் இருந்து கொச்சியில் உள்ள எடப்பள்ளியை இணைக்கும் தமனி தேசிய நெடுஞ்சாலையை 6 வழியாக அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில் இந்த 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரளாவில் இந்த 6 வழிச்சாலையை அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.3,465 கோடியை ஒதுக்கியுள்ளது. இதையொட்டி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you @nitin_gadkari Ji, Hon'ble Minister of Road Transport & Highways, Govt of India for sanctioning the 6-Laning work from Kodungallur to Edapally section of NH-66 (Old 17) with a budget of ₹3465.82 Cr on HAM under Bharatmala Pariyojana.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) November 21, 2021
Related Tags :
Next Story