ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்


ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலி: 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:02 PM GMT (Updated: 22 Nov 2021 10:02 PM GMT)

ஆந்திராவில் கனமழைக்கு 34 பேர் பலியானதுடன், 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா, 

ஆந்திர சட்டசபையில் அம்மாநில வேளாண்துறை மந்திரி கொரசாலா கண்ணபாபு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் 4 மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 34 பேர் இறந்துள்ளனர். இன்னும் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 5 லட்சத்து 33 ஆயிரம் விவசாயிகள் பயிர் சேதத்தை சந்தித்துள்ளனர். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பலியான கால்நடைகள் மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கும் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story