மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்


மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Nov 2021 5:18 AM GMT (Updated: 23 Nov 2021 5:18 AM GMT)

மராட்டியத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைவிருந்தில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள அவுரங்காபாத், ஜல்னா, நன்டெட் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

Next Story