கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,972- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை தொற்று பாதிப்பு 3,698- ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 370- பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,045- ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 97 ஆயிரத்து 845- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,978- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 18 ஆயிரத்து 279- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 52,710- ஆக உள்ளது.
மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 917- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரிசூர் மாவட்டத்தில் 619- பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 527- பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 60,265- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story