பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளர் கொலை; காஷ்மீரில் 3 பேர் கைது


பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளர் கொலை; காஷ்மீரில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 3:50 PM GMT (Updated: 23 Nov 2021 3:50 PM GMT)

காஷ்மீரில் பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.



ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் போஹ்ரி கடல் பகுதியில் கடந்த 9ந்தேதி இப்ராகிம் அகமது என்ற விற்பனையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இதுபற்றி காஷ்மீர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, பாகிஸ்தான் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப விற்பனையாளரை கொன்றோம் என கூறியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புல்வாமா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.


Next Story