கேரளாவில் மேலும் 4,280- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,280- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 48,916- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 8.74 சதவிகிதமாக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5,379- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 51,302- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,353- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story