கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
தெற்கு அந்தமான் கடலில் வருகிற 29ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் வருகிற 29ந்தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story