கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 26 Nov 2021 1:54 PM GMT (Updated: 26 Nov 2021 2:09 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த  24 மணி நேரத்தில்  56,588- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 8.26 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,632- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,459- ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,125- ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டங்களில் அதிகபட்சமாக  எர்ணாகுளத்தில் 823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 633- பேருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில்  588- பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story