கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,677- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 56,588- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 8.26 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,632- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,459- ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,125- ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 823- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 633- பேருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் 588- பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story