உத்தம்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து
மத்திய பிரதேசத்தில் உத்தம்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
மொரீனா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் இருந்து சத்தீஷ்காரின் துர்க் நகரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த ரெயில், மத்திய பிரதேசத்தின் ஹீதாம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், ரெயிலின் இரு பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை. பெட்டிகளில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story