நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு...


நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர்; காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு...
x
தினத்தந்தி 26 Nov 2021 10:52 PM GMT (Updated: 26 Nov 2021 10:52 PM GMT)

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளில் இரு அவைகளிலும் தவறாமல் ஆஜராக கட்சி எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டு உள்ளது.


புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.  இந்த தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் கூட்ட தொடர் துவங்கும் நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.


Next Story