20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு


20 வயது இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - அழுகிய நிலையில் சடலம் மீட்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 10:21 AM GMT (Updated: 27 Nov 2021 10:21 AM GMT)

பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட 20 வயது நிரம்பிய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளப்பட்டுள்ளது.

மும்பை,   

மராட்டிய மாநிலம் மும்பை குர்லா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள ’லிப்ட்’ அறையில் அழுகிய நிலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனையில் 20 வயது நிரம்பிய அந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை சில சிறுவர்கள் வீடியோ எடுப்பதற்காக பயன்படுத்தப்படாத அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டைமாடிக்கு சென்றுள்ளனர். அங்கு உள்ள ’லிப்ட்’ அறையில் உயிரிழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்த அந்த சிறுவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இளம் பெண்ணை யார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story